ADDED : மார் 12, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் கடை ஊழியர்களை மாலை 6:00 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று இ-கே.ஒய்.சி., விரல் ரேகை பதிவு செய்ய நிர்பந்திப்பதை கைவிடுவது, கடன் சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார். செயலாளர் நடராஜன் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், மலைச்சாமி, அருள்ஜோதி, வேலாயுதம் பங்கேற்றனர்.

