sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குத்தகைக்கு விட்டால் நிரந்தர உரிமம் ரத்துவீடுகளில் தயாரித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

/

குத்தகைக்கு விட்டால் நிரந்தர உரிமம் ரத்துவீடுகளில் தயாரித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

குத்தகைக்கு விட்டால் நிரந்தர உரிமம் ரத்துவீடுகளில் தயாரித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

குத்தகைக்கு விட்டால் நிரந்தர உரிமம் ரத்துவீடுகளில் தயாரித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


ADDED : ஜன 26, 2024 05:03 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். உள்குத்தகைக்கு விடுவது கண்டறியப்பட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும், என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். உரிமதாரர்கள் தங்களது பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடக் கூடாது.

ஆய்வின் போது கண்டறியப்பட்டால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். ஆலை உரிமதாரர்கள், குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை விதிக்கப்படும்.

இதே போல் நேற்று சாத்துார் சின்ன கொல்லபட்டியில் கலாராணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் அறையில், சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த அஜித் 23 சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது காலை 6:00 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

சட்ட விரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் வெடிகள், பட்டாசுகள், கருந்திரி தயாரிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும், இடத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெடிவிபத்தில்லா விருதுநகரை உருவாக்குவதில், சட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us