/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறனாய்வு தேர்வில் சாதனை: மாணவிகளுக்கு பாராட்டு
/
திறனாய்வு தேர்வில் சாதனை: மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : ஏப் 19, 2025 01:07 AM
விருதுநகர்:
2024--25ம் கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வுதேர்வில், விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 72 மாணவிகளில் 51 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3ம் இடம், மகளிர் நடுநிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 31 மாணவிகளில் 20 பேர் தேர்ச்சி பெற்று 19ம் இடம், அண்ணாமலையம்மாள் நடுநிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 35 மாணவிகளில் 23 பேர் தேர்ச்சி பெற்று 18ம் இடம் பெற்றனர்.
ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தனுஷியா 180க்கு 151 மதிப்பெண் பெற்று பொதுப் பிரிவில் 6ம் இடம் பெற்றார்.
தேர்ச்சி பெற்ற மாணவிகளை விருதுநகர்ஷத்திரிய பெண்கள் பள்ளிகள் மேனேஜிங் போர்டு செயலாளர் சபரிமுத்து, தலைவர் நவராஜன், உபதலைவர் சங்கரதாஸ், இணைச் செயலாளர்பாலமுருகன், பொருளாளர் முத்து பாராட்டினர்.

