நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளராகவும், பொது மருத்துவத்துறையில் பேராசிரியரான இருந்தவர் டாக்டர் அன்புவேல்.
இவருக்கான பணிநிறைவு பாராட்டு விழா விருதுநகர் அரசு மருத்துவமனையில் டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, உதவி ஆர்.எம்.ஓ., வரதீஸ்வரி, துறைத்தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

