தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வைபாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் கவலை

 வைபாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் கவலை

 வைபாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் கவலை


ADDED : ஏப் 14, 2026 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 10:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் கழிவுநீர் கலப்பதாலும் தண்ணீரின் நிறம் மாறி விவசாயத்திற்கு பயன்படவில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வைப்பாற்றின் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தவிர வைப்பாறு செல்லும் வழியில் உள்ள சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் வைப்பாற்றில் வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுகின்றது. மேலும் வெம்பக்கோட்டை பகுதியில் குடியிருப்பு கடைகளில் கழிவுகள் நேரடியாக வைப்பாற்றில் கலக்கின்றது. இதனால் தண்ணீர் நிறம் மாறி வைப்பாறு பாழாகின்றது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகின்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us