நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் காங்., சார்பில் கட்சி தலைவர்கள் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜவகர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சக்தி மோகன், நகராட்சி கவுன்சிலர் ஏ.டி சங்கர்கணேஷ், நகர, வட்டாரநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை நகர் காங்., தலைவர் ஆர். சங்கர் கணேஷ் செய்தார்.