ADDED : ஏப் 18, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, நகர் தலைவர் நாகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

