நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் காங். சார்பில் நுாறு நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி அமைதி வழி தர்ணா போராட்டம் நடந்தது.
மாணிக்கம் தாகூர் தலைமை வகித்து பேசினார். இதில் 13 கோடி மக்களை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும், நுாறு நாள் வேலை திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
தெற்கு மாவட்ட தலைவர் உலகநாதன், தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

