நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : ஏழாயிரம் பண்ணை சீர் காட்சி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜை நடந்தது.
பின்னர் யாகசாலையில் இருந்த புனித நீரை பட்டர்கள் கோயில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.