/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தொடருது ...: கண்காணிப்புகளை மீறி நடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
/
காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தொடருது ...: கண்காணிப்புகளை மீறி நடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தொடருது ...: கண்காணிப்புகளை மீறி நடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தொடருது ...: கண்காணிப்புகளை மீறி நடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 25, 2025 02:48 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி காட்டுப் பகுதியில் திருட்டுத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை ஆய்வு செய்து தடுப்பதோடு, உற்பத்தி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இது தவிர 2000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்குகின்றன. பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாக சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர்.
தவிர பட்டாசு கடை அருகிலும் செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டது. இங்கு எந்த வித பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. பட்டாசு தயாரிப்பது மட்டுமே முக்கிய நோக்கமாக இருக்கும். இது போன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக கொடுக்கப்படுகின்றது.
அதே சமயத்தில் அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண உதவி கிடைக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் சமீபகாலமாக காட்டுப் பகுதியில் தகர செட் அமைத்தும், மரத்தடியிலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது நடந்து வருகிறது. இங்கும் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் அதிக ஆட்களை வைத்து உற்பத்தியை பெருக்கும் எண்ணத்தில் பட்டாசு உற்பத்தி நடந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்குமுன் சிவகாசி அருகே மங்கலத்தில் சட்ட விரோதமாக காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மணி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நகரில், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் காட்டுப்பகுதிகளை கண்டுகொள்ள வாய்ப்பு இல்லை. இதனை பயன்படுத்தி ஒரு சிலர் காட்டுப்பகுதிக்குள் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கின்றனர்.
அதே போல் சாத்துார் அச்சங்குளம் பட்டாசு கடையில் சட்ட விரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் அதே பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார்.
2025 ம் ஆண்டு தீபாவளிக்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி துவங்கி நடந்து வருகின்றது. அதே சமயத்தில் சட்ட விரோதமாகவும் ஒரு சிலர் பட்டாசு தயாரித்து வருகின்றனர்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்த பின்னரே அதிகாரிகள் ஆய்வு செய்யும் வழக்கம் உள்ளது. எனவே கிராமப் பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.