sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை அதிகபட்சம் சிவகாசியில் 33 மி.மீ., பதிவு

/

மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை அதிகபட்சம் சிவகாசியில் 33 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை அதிகபட்சம் சிவகாசியில் 33 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை அதிகபட்சம் சிவகாசியில் 33 மி.மீ., பதிவு


ADDED : அக் 16, 2025 11:54 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை பெய்ததால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக சிவகாசியில் 33 மி.மீ., மழையளவு பதிவானது.

தமிழகம் முழுவதும் அக். 15 முதல் 21 வரை மழை அதிகளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து மக்கள் தயார் நிலையில் இருந்தனர். எதிர்பார்த்தது போலவே விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்து கொட்டி தீர்த்தது. இடைவிடாத சாரல் மழையாக காலை முதல் மதியம் வரை தொடர்ந்தது.

விருதுநகரில் மதுரை ரோடு, மெயின் பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் பகுதி களில் மக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். வியாபாரிகள் காய்கறிகளை நனையாமல் பாதுகாத்தனர். முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி பின் வடிந்தது.

இதே போல் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் காலையில் இருந்து மழை பெய்து கொட்டி தீர்த்தது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

இதனால் மக்கள் சிரமத்தை சந்தித்தனர். செப். மாதம் முழுவதும் வறண்ட வானிலையாக காணப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழை விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக மழையை எதிர்பார்த்து நடவு செய்த நிலையில், குளிர்ந்த சூழல் மட்டுமே நிலவி வந்தது. மழை இல்லாததால் பயிர்கள் வாடிய நிலையில், நேற்று பெய்த மழையால் அவற்றிற்கு போதிய நீர்வரத்து ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us