ADDED : பிப் 23, 2026 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில் நுட்பக்கல்லுாரியில் நுண்கலைத்துறையின் சார்பில் நாட்டியப்போட்டிகள் செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், கரிஷ்மா நீனு பங்கேற்றனர். இதில் கல்லுாரி தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் தனபால், பொருளாளர் தியாகராஜன், கல்லுாரி முதல்வர் செந்தில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நுண்கலைத் துறைத்தலைவர் லுானா யூனிஸ், உதவி பேராசிரியர்கள் பிரதீப்குமார், ஆசீர், விஜயலட்சுமி செய்தனர்.

