ADDED : ஆக 27, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ரங்கர் கோயில் வனப்பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை 3 பேர்கொண்ட குழுவினர் நாட்டுத் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஏட்டு தனுஷ்கோடியை வனத்துறையினர் கைது செய்தனர். அவருடன் வந்த மம்சாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தங்கராஜ் தப்பி ஓடி உள்ளனர். தனுஷ்கோடியை சஸ்பெண்ட் செய்து விருதுநகர் எஸ்.பி. கண்ணன் நேற்று உத்தரவிட்டார்.