/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இழப்பீடு வழங்குவதில் தாமதம் அரசு பஸ் ஜப்தி
/
இழப்பீடு வழங்குவதில் தாமதம் அரசு பஸ் ஜப்தி
ADDED : நவ 04, 2025 03:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையத்தில் பஸ் விபத்தில் பலியான முத்துக்குமார் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் 36, பெயின்டர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இத்தம்பதிக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். 2015 மே 18 மாலை 4:45 மணிக்கு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறிய போது தவறி விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் அவரது குடும்பத்திற்கு ரூ.14 லட்சத்து 34 ஆயிரத்தை மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், இழப் பீடாக வழங்க 2023ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி தமிழ்ச்செல்வி நீதிமன்றத்தில் மனு செய்தார். இதில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

