ADDED : செப் 24, 2024 04:18 AM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அழகியநல்லுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மக்கள ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் அருகே கீழ அழகியநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு பஸ் ஸ்டாப் அருகே புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவற்றை அகற்ற பலமுறை ஊராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும் நேற்று காலை அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் ரமணனிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் ரேஷன் கடை கட்டி தரவும், மனு கொடுத்தனர்.
