நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஸ்வகர்மா சமுதாயத்தை அவதூறாக பேசியதாக விஸ்வகர்மா ஐந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு ,தொழிலாளர் வாழ்வுரிமைக் கட்சி இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மத்திய நிதி அமைச்சர் விஸ்வகர்மா சமுதாயத்தை பற்றிய பேசிய கருத்துக்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். விஸ்வகர்மா சமுதாயத்தினர், தொழிலாளர் வாழ்வுரிமைக் கட்சியினர் கலந்து கொண்டனர்.