ADDED : நவ 14, 2024 06:48 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் ; விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து நகர்குழு செயலாளர் ஜெயபாரத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நேரு உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
