ADDED : ஜன 07, 2025 04:24 AM

அ நிறம் | அளவு
சாத்துார்: அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் அத்துமீறலை கண்டித்தும் பொங்கலுக்கு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 வழங்க வலியுறுத்தியும் சாத்துாரில் தே.மு.தி.க..வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர் பாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார்.,கேப்டன் நற்பணி மன்றம் முன்னாள் தலைவர் முத்து உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
