ADDED : ஜன 26, 2024 04:53 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை தாக்கிய நலக்குழு உறுப்பினர் மாரியப்பனை பதவி நீக்கம் மற்றும் கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். செயலாளர் மலர்பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ், மாநில பொதுச் செயலாளர் பாண்டியராஜ் பேசினர். வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.
