நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண். 243 ரத்து செய்ய வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் அழகுராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் குணசேகரன் பங்கேற்று பேசினார். இதில் ஆரம்பபள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் வைரமுத்து, சரவணக்குமார், கண்ணன், சங்கர் கணேஷ், ஜெயகணேஷ், டேவிட், செல்வகணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

