ADDED : பிப் 15, 2024 04:52 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மார்க்சிஸ்ட் சார்பில் கூரைக்குண்டு ஊராட்சியின் முத்துராமலிங்க நகரில் முல்லை, மல்லிகை, செம்பருத்தி தெருக்களில் புதிய ரோடு அமைப்பதற்காக ஜல்லி பரப்பி 40 நாள்களை கடந்தும் ரோடு அமை க்கப்படாததை கண்டித்து நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நகரச் செயலாளர் முருகன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
