ADDED : ஜூன் 11, 2025 07:08 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850, குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் சரஸ்வதி தலைமையில் கருப்பு ஆடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டச் செயலாளர் சாரதாபாய், நிர்வாகிகள் சங்கரநாராயணன், மாரியம்மாள், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா பங்கேற்றனர்.
