ADDED : நவ 08, 2025 01:36 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: தேர்தல் வாக்குறுதிப்படி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா கோரிக்கை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கண்ணன், பொருளாளர் சுப்புக்காளை பேசினர்.
