ADDED : பிப் 14, 2026 06:10 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் ஆதிதிராவிடர் துறை அடிப்படை ஊழியர் சங்கம் சார்பில் விடுதிகளில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ரூ.15 ஆயிரத்து 700 கால முறை ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் வைரவன் பேசினர்.
