UPDATED : ஜூன் 08, 2026 08:12 PM
ADDED : ஜூன் 08, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துார் ஊராட்சி ஒன்றியம் அலுலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., , அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் மனோஜ் குமார், தாலுகா உறுப்பினர் உறுப்பினர் பாலசுப்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக் குமார் தலைமை வகித்தனர்.
முத்தார் பட்டியில் நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உட்பட அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதுட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
