UPDATED : ஆக 26, 2026 07:10 PM
ADDED : ஆக 26, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் பணிக்கான ஒப்பந்தம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி மண்டல தலைவர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மண்டல பொதுச்செயலாளர் மூர்த்தி, சம்மேளன துணை பொதுச்செயலாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் பொன்னுப்பாண்டியன், மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
