நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் கீழச் செல்லையாபுரத்தை சேர்ந்தவர் குருநாதன், 45. புல்லக் கவுன்டன் பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு டூவீலரில் வீடு திரும்பினார். (ஹெல்மெட் அணியவில்லை).
கீழச் செல்லையாபுரம் விலக்கில் திரும்பிய போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு இறந்தார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.