sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மயானம் இல்லாததால் சிரமம்

/

மயானம் இல்லாததால் சிரமம்

மயானம் இல்லாததால் சிரமம்

மயானம் இல்லாததால் சிரமம்


ADDED : அக் 28, 2025 03:26 AM

Google News

ADDED : அக் 28, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே கமுதிவிலக்கு அருகில் உள்ள குடியிருப்போருக்கு மயான வசதி இல்லாததால் சொந்த ஊர்களுக்கு இறந்தவர்களை கொண்டு செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தும்முசின்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கமுதி விலக்கு சந்திப்பு. இந்தப் பகுதியில் உள்ள புறநகர் பகுதியில் பல சமுதாயத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இங்கு புது மயானம் கட்டப்படவில்லை. இதனால், இறந்தவர்களை புதைக்க , எரிக்க மயானம் இல்லாததால் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்று அங்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். பல ஆண்டுகளாக மயான வசதி கேட்டு போராடியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இந்த புறநகர் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்சூழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கமுதி விலக்கு பகுதியில் ஒரு பொது மயானம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us