/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருந்தாளுனர் பணியிடங்களை விகிதாச்சாரத்தில் நிரப்பும் நடவடிக்கை டிப்ளமோ முடித்தவர்கள் கோரிக்கை
/
அரசு மருந்தாளுனர் பணியிடங்களை விகிதாச்சாரத்தில் நிரப்பும் நடவடிக்கை டிப்ளமோ முடித்தவர்கள் கோரிக்கை
அரசு மருந்தாளுனர் பணியிடங்களை விகிதாச்சாரத்தில் நிரப்பும் நடவடிக்கை டிப்ளமோ முடித்தவர்கள் கோரிக்கை
அரசு மருந்தாளுனர் பணியிடங்களை விகிதாச்சாரத்தில் நிரப்பும் நடவடிக்கை டிப்ளமோ முடித்தவர்கள் கோரிக்கை
ADDED : செப் 23, 2025 03:44 AM
விருதுநகர்: அரசு மருத்துவமனைகளின் மருந்தாளுனர் பணியிடங்களில் தற்போது பெரும்பாலும் இளங்கலை, முதுகலை பார்மஸி, பி.எச்.டி., முடித்தவர்கள் பணிபுரிகின்றனர்.
இதனால் டிப்ளமோ பார்மஸி முடித்தவர்களுக்கு அரசு வேலை இல்லாமல் போகிறது. அரசு மருந்தாளுனர் பணியிடங்களில் டிப்ளமோ முடித்தவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க விகிதாச்சாரத்தில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு நகர, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ பார்மஸி பயிற்சி முடித்திருந்தால் போதும். இப்பணியிடங்கள் எம்.ஆர்.பி., (மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்) மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு நிரப்பப்படுகின்றனர். ஆனால் இளங்கலை, முதுகலை பார்மஸி, பி.எச்.டி., முடித்தவர்கள் அரசு மருந்தாளுனர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு எழுதி பணிக்கு வருகின்றனர்.
தமிழகத்தில் 1989 முதல் 2025 வரை டிப்ளமோ பார்மஸி முடித்த 1 லட்சம் பேர் வேலையின்றி கிடைத்த வேலைகளை செய்கின்றனர். தனியார் மருந்தகங்களில் மாதம் ரூ. 8 ஆயிரம் சம்பளத்திற்கு பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிரப்பப்பட்ட 1383 அரசு மருந்தாளுனர் பணியிடங்களில் 12 பேர் மட்டுமே டிப்ளமோ பார்மஸி முடித்தவர்கள். மற்ற அனைவரும் இளங்கலை, முதுகலை பார்மஸி, பி.எச்.டி., முடித்தவர்கள்.
இது போன்ற நிலை விரைவில் நிரப்பப்படவுள்ள 683 அரசு மருந்தாளுனர் பணியிடங்களிலும் டிப்ளமோ பார்மஸி முடித்தவர்களுக்கு ஏற்படக்கூடும். இனி வரும் காலங்களில் டிப்ளமோ பார்மஸி முடித்தால் அரசு வேலை கிடைக்காத நிலை ஏற் பட்டுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் டிப்ளமோ பார்மஸி முடித்தவர்களும் அரசு பணிக்கு வர எதுவாக விகிதாச்சாரம் அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் . இதன் மூலம் அரசு வேலைக்காக காத்திருக்கும், படித்து கொண்டிருக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டிப்ளமோ பார்மஸி முடித்தவர்கள் பயன் பெறுவர்.