/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரசாரங்களில் சுறுசுறு தி.மு.க., பா.ஜ.,
/
பிரசாரங்களில் சுறுசுறு தி.மு.க., பா.ஜ.,
ADDED : பிப் 27, 2026 06:58 AM
அருப்புக்கோட்டை: தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், அருப்புக்கோட்டை தொகுதியில் தி.மு.க., ,பா.ஜ., கட்சியினர் முந்திக்கொண்டு தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டம், டிஜிட்டல் பிரசாரம், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் என அசத்தி வருகின்றனர். இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தினம் தினம் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
அருப்புக்கோட்டையில் தேர்தல் விழா களைகட்டிய நிலையில், அருப்புக்கோட்டை அ.தி.மு.க., எந்தவித தேர்தல் பிர சாரங்களையும் முன்னெடுக்காமல் அமைதியாக உள்ளது. கூட்டணியுடன் சேர்ந்தும் செயல்படுவது இல்லை. கட்சியில் பல கோஷ்டிகளாக இருப்பதாலும், யார் வேட்பாளர் ஆவது என்று போட்டியில் இருப்பதாலும் பிரச்சாரங்களில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் என்றைக்கு நமது கட்சியில் தேர்தல் விழா களை கட்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

