sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டிரைவர் பலி

/

டிரைவர் பலி

டிரைவர் பலி

டிரைவர் பலி


ADDED : ஜூலை 22, 2025 03:25 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிரைவர் பலி

அருப்புக்கோட்டை: தூத்துக்குடி அருகே நாசரேத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஹரிஷ் ராலிங்சன், 40, இவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி நான்கு வழி சாலையில் அதிகாலை 2:30 மணிக்கு லாரியை ரோடு ஓரத்தில் நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க நான்கு வழி சாலையை கடந்த போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

மெக்கானிக் பலி

ராஜபாளையம்: ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் 46, காளியம்மன் கோயில் எதிரே டூ வீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு வெளியே வந்தார். எதிரே மெயின் ரோட்டில் அழகாபுரியை சேர்ந்த முனீஸ்வரன் 21, டூ வீலரில் எதிர்பாரா விதமாக மோதியதில் சம்பவ இடத்தில் வெங்கட்ராமன் (ஹெல்மெட் அணியவில்லை) உயிரிழந்தார். இவருக்கு மனைவி, 6 வயது மகள் உள்ளனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் பலி

சாத்துார்: சாத்துார் பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, 63.ஜூலை 10 இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள முள் செடிக்கு தீ வைத்த போது நிலை தடுமாறி நெருப்பில் விழுந்ததில் உடலில் தீக்காயம் அடைந்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us