sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 லாரிகளில் டீசல் திருட்டு அலறும் டிரைவர்கள்

/

 லாரிகளில் டீசல் திருட்டு அலறும் டிரைவர்கள்

 லாரிகளில் டீசல் திருட்டு அலறும் டிரைவர்கள்

 லாரிகளில் டீசல் திருட்டு அலறும் டிரைவர்கள்


ADDED : டிச 29, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரோடு ஓரங்களில் நிற்கும் லாரிகளில் டீசல்களை திருடி செல்வதால் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை வழியாக மதுரை -- தூத்துக்குடி நான்கு வழி சாலை செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் பல்வேறு விதமான பொருட்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்கிறது. நீண்ட தூரத்தில் இருந்தும் வரும் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் இளைப்பாறுவர். நேற்று முன் தினம் அதிகாலை1:30 மணிக்கு மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த 2 டேங்கர் லாரிகள் பஸ் ஸ்டாப் அருகில் நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்து லாரியை ஓட்ட முயன்ற போது ஸ்டார்ட் ஆகவில்லை.

டிரைவர்கள் கீழே இறங்கி வந்து பார்த்த போது 2 லாரிகளின் டேங்க் மூடி உடைக்கப்பட்டு அதிலிருந்து டீசல் திருடு போனது தெரிய வந்தது. ஒவ்வொரு லாரியிலும் 500 லிட்டருக்கு மேல் டீசல் திருடப்பட்டு உள்ளதால் லாரி டிரைவர்கள் மீண்டும் டீசல் போட பணம் இல்லாமல் திண்டாடி போய் உள்ளனர்.

ஹைவே பெட்ரோல் மற்றும் இரவு நேர ரோந்து செல்லும் போலீஸார்கள் நான்கு வழி ரோடுகளில் அடிக்கடி சோதனை செய்து டீசல் திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us