sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முயற்சி

/

கோயில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முயற்சி

கோயில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முயற்சி

கோயில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முயற்சி


ADDED : மே 21, 2025 06:22 AM

Google News

ADDED : மே 21, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே கிராம கோயில் நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி மந்தை ஊருணி அருகில் நூற்றாண்டு புகழ்வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. அந்த காலத்தில் இங்கிருந்த அரண்மனைகாரர்கள் கோயில் கட்டியும், கோயில் கைங்கரியத்திற்கு 30 ஏக்கர் நிலத்தையும் கொடுத்துள்ளனர். இந்த நிலத்தில் உழவடை மட்டும் செய்வதுடன் நிலத்தை விற்க முடியாது. இந்த நிலம் காவல் மானியத்திற்கு ஒதுக்கப்பட்டது.

1985 முறையான ஆவணங்கள் இன்றி 3 ஏக்கர் கோயில் நிலம் பல பேர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தெரிந்த ஊர் மக்கள் 2020ல், கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும் தனி நபர்களுக்கு பெயர் மாற்றத்திற்கு அனுமதிக்க கூடாது என விருதுநகர் மாவட்ட நகரமைப்பு பிரிவில் புகார் கொடுத்தனர்.

அலுவலகத்தில் இருந்து மக்களிடம் விளக்கம் பெறாமல் பெயர் மாற்றம் செய்யப்படாது என அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் முடிந்தவுடன், கோயில் நிலத்திற்கு உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்றுள்ளதை தெரிந்த மக்கள், கோயில் நிலத்தை தனி நபருக்கு பெயர் மாற்றம் செய்தால் போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.

முருகன், ஊர் தலைவர்: ஆத்திப்பட்டியில் காலம் காலமாக பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனியார் முறையான ஆவணங்கள் இன்றி பிளாட் போட முயற்சி செய்து வருகின்றனர்.

இது குறித்து ஊர் மக்கள் விருதுநகர் மாவட்ட நகர அமைப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் அதையும் மீறி பிளாட் போடும் பணி நடந்து வருகிறது. அரசு தலையிட்டு இதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், ஊர் மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.






      Dinamalar
      Follow us