/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் செயல்முறை கலந்தாய்வு கூட்டம்
/
தேர்தல் செயல்முறை கலந்தாய்வு கூட்டம்
ADDED : மார் 19, 2025 06:29 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறையை வலுப்படுத்துதல் குறித்தான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதற்கு ஆர்.டி.ஓ., கனகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பாஜ., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ., கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் :
பழனிச்சாமி, தி.மு.க.,: வாக்காளர் பட்டியலில் ஒரு சில நபர்களுக்கு 2 இடத்தில் ஓட்டுகள் உள்ளது. இவற்றை நீக்க வேண்டும்.
சோலை சேதுபதி, அ.தி.மு.க.,: வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கு இறப்புச் சான்றிதழை வழங்கி நீக்க வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இறந்தவர்கள் விபரங்கள் இருக்கும் அதன் அடிப்படையில் அதிகாரிகளே இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
நாகராஜன், பா.ஜ.,: ஒரு சில கிராமங்களில் இருப்பவர்களுக்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் பூத் உள்ளது. இதனால் மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று ஓட்டளிக்க வேண்டிய நிலை உள்ளது. அந்தந்த பூத்துகள் இருக்கும் பகுதியிலேயே ஓட்டுகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.