நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே பெரியவள்ளி குளம் லட்சுமிபதிநகரைச் சேர்ந்தவர் பச்சைமால் 45. இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று காலை 5:00 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இவரின் அலைபேசிக்கு மனைவி அழைத்தும் எடுக்காததால் உணவு கொடுப்பதற்காக மருமகன் பெரியவள்ளிகுளத்தில் உள்ள அலுவலகத்திற்கு காலை 10:30 மணிக்கு வந்தார்.
அலுவலக வளாகத்தில் இருந்த வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்தார். இது குறித்து சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

