ADDED : மே 05, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் மின் கோட்ட செயற் பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு:
ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே 6- காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயனடைவதுடன், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.