ADDED : டிச 01, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற் பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு: ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் டிச. 2- காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மின் நுகர்வோர்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயனடைவதுடன், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

