ADDED : ஜன 09, 2025 04:48 AM
விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களக்கான பணியாளர் பணி தொடர்பாகவும், பணியின் போதும், அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிரவும், அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்யும் வகையில் 4வது பணியாளர் நாள் நிகழ்வு ஜன. 10 காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் வைத்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் தலைமையில் நடக்க உள்ளது.
எனவே பணியாளர் பணி தொடர்பாகவும், பணியின்போதும் அல்லதுவேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக பணியாளர் நாள் நிகழ்வின் போது மனுக்களை அளிக்கலாம், என்றார்.