/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஆக்கிரமிப்பு கடைகள், கோயில் அகற்றம்
/
சிவகாசியில் ஆக்கிரமிப்பு கடைகள், கோயில் அகற்றம்
ADDED : மே 30, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:சிவகாசி மாநகராட்சி அருணாச்சலம் ரோட்டில் மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், கோயில்கள் அகற்றப்பட்டன.
சிவகாசி மாநகராட்சி அருணாச்சலம் ரோட்டில்கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர் மதியழகன், நகரமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள், கோயில் மணல் அள்ளும் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டது.
ஒரு சில கடைக்கு பட்டா உள்ளது என உரிமையாளர்கள் கூறிய நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் உதவியுடன் கடைகள் இடிக்கப்பட்டது.