sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகரங்களில் பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

/

நகரங்களில் பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

நகரங்களில் பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

நகரங்களில் பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 19, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாகவே நகரங்களில் குறிப்பாக பஜார் பகுதிகளில் கடைகளில் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கிவிட்டது. ஒவ்வொரு கடைக்காரர்களும் போட்டி போட்டு கொண்டு ரோட்டை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால் பஜாருக்கு டூவீலரில் வருபவர்கள் தங்களது வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விடுகின்றனர். சில இடங்களில் ரோட்டின் இருபுறத்திலும் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

சிவகாசியில் பஸ் ஸ்டாண்ட் எதிரில், ரத வீதிகள், காந்தி ரோடு, திருத்தங்கல் ரோடு, என்.ஆர்.கே., ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டிலேயே டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது. பொதுவாக ஒரு நிறுவனமோ, வணிக வளாகமோ கட்டும்போது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பான்மையானவர்கள் இதனை கடைபிடிப்பதில்லை.

இதனால் அங்கு டூவீலர், வாகனங்களில் வருபவர்கள் வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ரோடும் குறுகிய நிலையில் வாகனங்களையும் அங்கேயே நிறுத்துவதால் விபத்து ஏற்படுகின்றது. இதே நிலைதான் கிராமப் பகுதிகளிலும் ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது.

புதிதாக நிறுவனமோ, வணிக வளாகமோ கட்டுகையில் அங்கு வாகனத்தை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி உள்ளதா என உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. எனவே இனிமேல் கட்டப்படும் நிறுவனங்களுக்காவது உரிய பார்க்கிங் வசதி உள்ளதா என ஆய்வு செய்த பின்னரே உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us