நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தேர்தல் பேரவை கூட்டம் மாநில துணை தலைவர் ஆலிஷ் ஷீலா தலைமையில் நடந்தது.
இதில் விருதுநகர் மாவட்ட தலைவராக பாலமுருகன், மாவட்ட செயலாளராக சாணக்கியன், பொருளாளராக பாண்டி உள்பட பிற மாவட்ட நிர்வாகிகளை அனைத்து வட்ட கிளை தலைவர், செயலாளர், பொருளாளர் சேர்ந்து தேர்வு செய்தனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் அய்யாதுரை, முன்னாள் பொருளாளர் துரைச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும் பல்வேறு அரசு துறை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.