sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செகந்திராபாத் --கொல்லம் ரயிலை தொடர்ந்து இயக்க எதிர்பார்ப்பு

/

செகந்திராபாத் --கொல்லம் ரயிலை தொடர்ந்து இயக்க எதிர்பார்ப்பு

செகந்திராபாத் --கொல்லம் ரயிலை தொடர்ந்து இயக்க எதிர்பார்ப்பு

செகந்திராபாத் --கொல்லம் ரயிலை தொடர்ந்து இயக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜன 16, 2025 11:45 PM

Google News

ADDED : ஜன 16, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:சபரிமலை சீசனை முன்னிட்டு செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிசம்பர் முதல் வியாழன் தோறும் இரவு 8:00 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக கொல்லம் சென்றடைந்து, மறு மார்க்கத்தில் சனிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1:30 மணிக்கு செகந்தராபாத் சென்றடைந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியே பயணித்ததால் மக்கள் அதிகளவில் பயணித்தனர்.

நல்ல வரவேற்பு இருந்ததால் ஜனவரியிலும் தொடர்ந்து இயக்கப்பட்டது. நாளை (ஜன.18) கொல்லத்தில் இருந்து புறப்படுவதுடன் இதன் பயணம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலால் சபரிமலை பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட பயணிகள், கேரளா, ஆந்திரா, தமிழகம் என மூன்று மாநில மக்கள் பயனடைந்தனர். எனவே இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us