/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 08, 2025 11:22 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவது குறித்த புகார்கள் தொடர்ந்து வருவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மாணவர்களையும் விற்பனையில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுவதால் பள்ளிகளில் உளவியல் ஆலோசனை மையத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது குறித்து புகார்கள் கூறப்படுகின்றன. இதன்படி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து பள்ளி அருகே போதை பொருட்கள் விநியோகிப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் என கடந்த ஆறு மாதங்களில் போலீசாரால் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விற்பனை செய்பவர்கள் சமீபத்தில் படிப்பை முடித்த பள்ளி கல்லுாரி, மாணவர்களையும் விடுமுறை காலங்களில் இந்த பழக்கத்திற்கு அறிமுக மாணவர்களையும் இதே போதை பொருட்கள் சப்ளைக்கு உபயோகப்படுத்த முனைவது தொடர் விசாரணையில் தெரிய வருகிறது.
எனவே ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசனை மையம் அமைத்து தனியாக இதற்கென ஆசிரியரை நியமனம் செய்து கண்காணிப்பதுடன் போதைக்கு அடிமையான மாணவர்களை இதிலிருந்து விடுபட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.