நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை, மருத்துவப்பணிகள், மதுரை ஹச் ஹித்மத் கமிட்டி சார்பில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் முதல் முறையாக ஹஜ் யாத்திரை செல்லும் 24 பெண்கள், 27 ஆண்கள் என மொத்தம் 51 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
இவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி., கல்லீரல், மார்பக எக்ஸ்ரே உள்பட பல்வேறு பரிசோதனைகள், இன்புளூயன்சா தடுப்பூசி, மூளைக்காய்ச்சல் தடுப்பூசி, புளு தடுப்பூசிகள், கொரோனா பரிசோதனைகள் மருத்துவமனை மேலாண்மை திட்டத்தில் (எச்.எம்.ஐ.எஸ்., 3.0) செய்யப்பட்டது. இவர்கள் மே.9ல் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

