நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசர்களுக்கான கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது.
விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
விருதுநகர் ராஜேந்திரன் மொபைல் ஐ கிளினிக், ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

