sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விளை நிலங்களில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அச்சம் விவசாயிகள் அச்சம்

/

விளை நிலங்களில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அச்சம் விவசாயிகள் அச்சம்

விளை நிலங்களில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அச்சம் விவசாயிகள் அச்சம்

விளை நிலங்களில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அச்சம் விவசாயிகள் அச்சம்


ADDED : ஆக 31, 2025 12:26 AM

Google News

ADDED : ஆக 31, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் சாய்ந்த, சேதம் அடைந்த மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இந்த விவசாய நிலங்களில் வழியாக மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்சாரம் செல்கின்றது. விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் ஒரு சில மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.

பெரிய மழை பெய்யும் போது சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடனே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உழவுப் பணிகள் நடந்து வருகிறது. விவசாய பணிகள் நடைபெறும் போது மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும், சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us