/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுடுமண் பானை மூடி கைப்பிடி கண்டெடுப்பு
/
சுடுமண் பானை மூடி கைப்பிடி கண்டெடுப்பு
ADDED : பிப் 11, 2025 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, : விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானை மூடியின் கைப்பிடி கண்டெடுக்கப்பட்டது.
இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3500 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண் பானை மூடியின் கைப்பிடி கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் ''முன்னோர்கள் தொழிற் கூடம் நடத்தி, வாழ்ந்ததற்கு சான்றாக அதிக சுடுமண் பானைகள் கிடைத்து வருகின்றது. தற்போது அந்த பானை மூடியின் கைப்பிடி கிடைத்துள்ளது ''என்றார்.