sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் பதிவு செய்யலாம்

/

மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் பதிவு செய்யலாம்

மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் பதிவு செய்யலாம்

மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் பதிவு செய்யலாம்


ADDED : ஏப் 03, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: மாவட்டத்தில் மத்திய அரசு திட்ட பயனாளிகளின்விவரங்களை ரேஷன் கார்டுடன் ஆதார் எண் விரல் ரேகை பதிவு செய்வது83 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விடுபட்டவர்கள் ஏப். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் விரல் ரேகை பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் முன்னுரிமை குடும்ப அட்டை (பி.எச்.எச்) அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) குடும்ப அட்டைகளுக்கு அதிகபட்சமாக 35 கிலோ வரை இலவச அரிசியும், மானிய விலையில் கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பலர் முறைகேடாக பெறுவதால் அரிசி வீணாவதாக கருதிய மத்திய அரசு குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகளை மார்ச் 31 வரை காலக்கெடு விதித்து கட்டாயம் ஆக்கியது. தற்போது இக்கால கெடுவினை ஏப். 15 வரை நீட்டிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் 7,43,724 முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் 6,13,684 கார்டுகளிலும் அந்தியோதயா கார்டுகளில் 1,37,066 என ஒட்டுமொத்தமாக 83 சதவீதம்விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

விடுபட்ட கார்டுதாரர்களில் இறந்த உறுப்பினர்களை இறப்புச் சான்றிதழ் இன்றி பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை. இதற்கு தீர்வாக அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களின் அறிக்கை கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒப்புதல் வழங்க அனுமதி கேட்டுள்ளோம்.

வெளியூர்களில் தங்கி படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் ஏப்.15க்குள் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் சென்று ஆதார் அட்டைகள் மூலம் விரல் ரேகையை பதிவு செய்யலாம்.






      Dinamalar
      Follow us