ADDED : ஜூலை 15, 2025 03:14 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மீனாம்பிகை பங்களாவைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் 50. இவர் தந்திமர தெருவில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இதன் பின்னால் கிடந்த குப்பையில் பிடித்த தீ கறிக்கடைக்கும் பரவி கடை முழுவதும் தீயில் எரிந்து பாழானது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
