/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
/
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
ADDED : செப் 04, 2025 09:40 AM

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே கீழத்தாயில்பட்டி வெற்றிலையூரணியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை சேதம் அடைந்தது.
சிவகாசியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ளது. நாக்பூர் லைசன்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
நேற்று மதியம் 12:00 மணிக்கு, பேன்சி ரக பட்டாசுக்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருந்தில் உராய்வு ஏற்பட்டது.
சுதாரித்த தொழிலாளர்கள் ஆலையை விட்டு ஓடி வெளியேறினர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில், ஒரு அறை மட்டும் சேதமடைந்தது. வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.